8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 
8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய  மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்  துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு. பிரபாகர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com