வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தமிழக அரசு பரிசீலனை

விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2023, 11:46 am

விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பி. செந்தில்குமார், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதன்படி, விதிகளுக்கு புறம்பாக மாவட்ட எல்லைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிசீலனை செய்வதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

தமிழக எல்லையோர மாவட்டங்களில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.