அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு

இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

இன்று முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு ஆசிரியர், ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com