தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மூத்த புகைப்படக்காரர் உயிரிழப்பு

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன்

Updated On :2 ஜனவரி 2023, 11:36 am IST

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி இந்து நாளிதழில்(ஆங்கிலம்) மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றுபவர் கே.வி. என்றழைக்கப்படும் கே.வி.சீனிவாசன்(வயது 56).

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கும் பணியில் இன்று காலை 4.30 மணியளவில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், கோயில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.