வைகுண்ட ஏகாதசி விழாவின்போது மூத்த புகைப்படக்காரர் உயிரிழப்பு

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன்
மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன்
Published on
Updated on
1 min read

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி இந்து நாளிதழில்(ஆங்கிலம்) மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றுபவர் கே.வி. என்றழைக்கப்படும் கே.வி.சீனிவாசன்(வயது 56).

சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கும் பணியில் இன்று காலை 4.30 மணியளவில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில், கோயில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com