கோயம்புத்தூர்: இன்று அதிகாலை சைக்கிளில் சென்ற தூய்மைப் பணியாளர் தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் தேவி மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியாகினர்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் தேவி, இவர்கள் தங்கள் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது பூலுவம்பட்டி அருகே அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நேர்ந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் சைக்கிள் மீது எதிரே வந்த அரசுப்பேருந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தம்பதிகள் ராஜேந்திரன் மற்றும் தேவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் குபேரன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க: ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.