ராமேஸ்வரம்: காணாமல்போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு!

ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 
ராமேஸ்வரம்: காணாமல்போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு!

ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். அடுத்த நாள் பிற்பகல் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. 

இதையடுத்து, காணாமல் போன மீனவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்ற நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு 4 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

படகில் ஏற்பட்ட பழுது காரணமாக மீனவர்கள் நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com