ராமேஸ்வரம் மண்டபம் அருகே காணாமல் போன 4 மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். அடுத்த நாள் பிற்பகல் வரை அவர்கள் கரை திரும்பவில்லை.
இதையடுத்து, காணாமல் போன மீனவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்ற நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு 4 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
படகில் ஏற்பட்ட பழுது காரணமாக மீனவர்கள் நெடுந்தீவு அருகே தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இதையும் படிக்க | போகி: பழைய பொருள்களை வாங்கும் சென்னை மாநகராட்சி!