பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆளுநர் ரவி நாளை தில்லி செல்கிறார்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் தில்லி புறப்பட்டுச் செல்கிறார். 

News image

ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

Updated On :12 ஜனவரி 2023, 10:02 am

DIN

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (வெள்ளிக்கிழமை)  பிற்பகலில் தில்லி செல்கிறார். 

பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை தொடர்பாக, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் சனிக்கிழமை மீண்டும் அவர் சென்னை திரும்புவார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தில்லியில் இன்று  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சந்தித்துப் பேசிய நிலையில், ஆளுநர் ரவியின் தில்லி பயணத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நாளை தமிழ்நாடு ஆளுநர் தில்லி செல்லவிருக்கிறார். மதியம் 1.30 மணிக்கு தில்லி செல்லும் ஆளுநர் அடுத்த நாள் மாலைதான் சென்னை திரும்புகிறார்.

ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் திமுக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.