

அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு தற்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பொறுப்பு வகிக்கும் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு கூடுதலாக திறன் மேம்பாட்டுக் கழகமும் மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தொழிலாளர்நலத் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டுக் கழகம் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.