கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

திருநள்ளாற்றில் 2023-ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:13 am IST

திருநள்ளாற்றில் 2023-ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இத்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்ரர் என்றும், அம்பிகை பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட இத்தலத்திற்கு வந்து மக்கள் வழிப்பட்டுச் செல்கின்றனர். சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கறுப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மேலும் சிறப்பானதாகும். 

அந்த வகையில், வாக்கிய பங்சாஞ்கத்தின்படியே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி பின்பற்றப்படுகிறது. எனவே, வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் ஜன. 17 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது. எனினும்,  திருப்பதி உள்பட பிற மாநிலங்களில் திருக்கணித முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.