ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளுக்காக பாஜக சார்பில் குழு

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது.
அண்ணாமலை
அண்ணாமலை
Updated on
1 min read

ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது.

வேதானந்தம், சரஸ்வதி, என்.பி.பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் அடங்கிய குழுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.

இத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தலைவர்களின் படம் மற்றும் பெயர்கள் மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com