கடந்த வார இறுதியில் தில்லி சென்று திரும்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, புதன்கிழமை காலை மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி சந்திக்க வாய்ப்புள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்ற குழு தலைவா் டி ஆா் பாலு, நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆ.ராசா, பி. வில்சன், என்.ஆா். இளங்கோ ஆகியோா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை கடந்த வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது மாளிகையில் சந்தித்தனா். பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த புகார் மனுவை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, குடியரசுத் தலைவரிடம் அளித்ததுடன் அதுகுறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.
குடியரசுத்தலைவா் மனுவைப் படித்துப் பாா்த்த பின்னா், ‘ நான் பாா்க்கின்றேன்’ என தெரிவித்தாா்.
இதனைத் தொடர்ந்து பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புகார் மனுவை ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து கடந்த வார இறுதி நாளில் தில்லி புறப்பட்டுச் சென்ற ஆளுநர் மீண்டும் தமிழ்நாடு திரும்பினார்.
இதையும் படிக்க | அதிமுகவை ஒன்றிணைக்க இபிஎஸ் - ஓபிஎஸ்ஸை சந்திப்பேன்: சசிகலா
இந்நிலையில், புதன்கிழமை காலை இரண்டு நாள் பயணமாக மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆளுநர் ரவி. தில்லி சென்றுள்ள ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தும் மத்திய உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் பேசக்கூடும் என தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தில்லியில் இருந்து சென்னை திரும்ப இருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பயணமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



