வாய்க்கால் தூர்வாரும் போது பெருமாள் சிலை கண்டெடுப்பு: வட்டாட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
வாய்க்கால் தூர்வாரும் போது பெருமாள் சிலை கண்டெடுப்பு: வட்டாட்சியர் ஆய்வு
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நெடுவாசல் ஊராட்சி செருகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமடை வாய்க்கால் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும்பொழுது 5 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை கிராம மக்கள்  கரைக்குக் கொண்டு வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தகவல் அறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் நேரில் சென்று  5 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த பெருமாள் கற்சிலையை ஆய்வு செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். பொறையார் காவல்துறையினர் மற்றும் வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள்  உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com