
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் 30-ம் ஆண்டு ஆடி குண்டத்தை முன்னிட்டு கொடியேற்றம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோயிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்குப் பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையகங்களில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு
கடந்த 18-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இதை அடுத்து லட்சார்னை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனின் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகின்ற 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.
இவ்விழா நிகழ்ச்சிகளை திருக்கோயில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...