அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சென்னையில் இயல்பை விட 295% அதிகம் பெய்த மழை

சென்னையில் ஜூன் மாதத்தில் இயல்பான அளவை விட 295 சதவிகிதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

குளம் போல் மாறிய சாலை.

Updated On :2 பிப்ரவரி 2024, 12:40 am IST


சென்னை: சென்னையில் ஜூன் மாதத்தில் இயல்பான அளவை விட 295 சதவிகிதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய பரவலாக மழை பெய்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.

ஜூன் மாதம் தொடங்கியது முதலே கோடை வெப்பட்டம் சுட்டெரித்து வந்த நிலையில், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சென்னையில் அதிகபட்ச மழையும் பதிவாகியிருக்கிறது.

திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. இதற்கு முன்பு 1996-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 280 மழை பதிவாகியிருந்தது.

இந்த அதிக மழைப்பொழிவு காரணமாக, தமிழகத்திலும், சென்னையிலும் இயல்பான மழைப்பொழிவைக் காட்டிலும் அதிகம் மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அவை விட 295 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருப்பதாகவும், சென்னையில் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 4 செ.மீ. என்றும், ஆனால் பெய்திருக்கும் மழை அளவு 16 செ.மீ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மழைப்பொழிவு சராசரியாக 3.5 சதவிகிதம் பெய்ய வேண்டிய நிலையில், 3.7 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.  நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 463 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.