சென்னை அசோக் நகரில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக் நகர் பகுதியில் ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக் நகர் பகுதியில் ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தியாகராய நகரில் இருந்து கே.கே.நகர், வளசரவாக்கம் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. துரைசாமி சுரங்கப்பாதை, தம்பையா சாலை, வீராசாமி தெரு, அசோக் நகர் 5வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனங்கள் அசோக் நகர் 3வது அவென்யூ, 8வது தெரு, 2வது அவென்யூ வழியே செல்லலாம் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com