பழனியில் நாளை ரோப் காா் சேவை நிறுத்தம்!

பழனி மலைக் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை (ஜூன் 23)  ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பழனி மலைக் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை நாளை (ஜூன் 23)  ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, இழுவை ரயிலுக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டே நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ரோப்காா் சேவை பக்தா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக நாளை ஒரு நாள் மட்டும் ரோப்காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com