கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

அமைச்சரான மகன் டிஆர்பி ராஜா! என்ன சொல்கிறார் டி.ஆர். பாலு?

தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 மே 2023, 6:31 am

DIN

தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா பொறுப்பேற்றார். இவர் திமுக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். 

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, 'டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டிஆர்பி ராஜா மிச்சிறப்பாக பணியாற்றி முதல்வரின் நன்மதிப்பைப் பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய மிக முக்கியமான வேண்டுகோள். அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும்' என்று கூறினார். 

பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, 'அவர் என்னுடைய நண்பர். எங்களுடைய மாவட்டச் செயலாளர். டிஆர்பி ராஜா அமைச்சராக அவரும் முக்கியமான காரணம்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.