மடாதிபதிகள் உள்ளே, குடியரசுத் தலைவர் வெளியே என்று புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கவுள்ளாா்.
புதிய கட்டடத்தை பிரதமா் திறக்கக் கூடாது; குடியரசுத் தலைவரே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இப்பொழுதிருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தான் மியூசியம் ஆக்கப்போவதாக சொன்னார்கள்.
ஆனால் மியூசியத்தில் இருக்கும் பொருளை புதிய கட்டிடத்தில் கொண்டுவந்து வைக்கிறார்கள்.
துவக்கமே அமர்க்களம்.
மடாதிபதிகள் உள்ளே
குடியரசுத்தலைவர் வெளியே என்று பதிவிட்டுள்ளார்.