கும்பகோணம் அருகே ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கும்பகோணம் அருகே ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசைகள் எரிந்து நாசம்


கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் வகை பட்டாசு விழுந்ததில், அங்குள்ள 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. 

வீட்டில் இருந்த ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. 

இந்த விபத்துகள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com