உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்துகொண்டிருந்த 40 பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர்.
பிரம்மக்கல் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்கியாரா மற்றும் டன்டல்கோன் பகுதிகளுக்கு இடையே சுரங்கவழிச் சாலைக் கட்டப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. 150 மீட்டர் அகலம் மற்றும் நாலறை கிலோமீட்டர் தூரம் கொண்ட பகுதி இடிந்து விழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஹரியாணா: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் 18-ஆக அதிகரிப்பு
தகவல் கிடைத்தவுடன் உத்தரகாசியின் காவல் கண்காணிப்பாளர் அர்பன் யாதுவான்ஷி சம்பவ இடத்திற்கு விரைந்தார். உடனே நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்.
மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகத்தின் பணியாளர்கள் ஆகியோரும் சம்ப இடத்தில் உள்ளனர்.
இந்த சுரங்கவழிப்பதை மூலம் உத்தரகாஷி, யாமுன்டோரி இடையே 26 கிலோமீட்டர் பயணதூரம் குறைக்கப்படவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு

இந்தியாவின் மதிப்புமிக்க பட்டியலிடப்படாத நிறுவனம் என்எஸ்இ

உளவியல் ஆலோசனை அவசியம்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



