ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது : 40 பேர் சிக்கிக்கொண்டனர்!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கவழிப்பாதை இடிந்து விழுந்ததால் பணியில் இருந்த 40 பேர் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர்.

News image
Updated On :12 நவம்பர் 2023, 4:13 pm IST

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை செய்துகொண்டிருந்த 40 பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர். 

பிரம்மக்கல் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்கியாரா மற்றும் டன்டல்கோன் பகுதிகளுக்கு இடையே சுரங்கவழிச் சாலைக் கட்டப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. 150 மீட்டர் அகலம் மற்றும் நாலறை கிலோமீட்டர் தூரம் கொண்ட பகுதி இடிந்து விழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்தவுடன் உத்தரகாசியின் காவல் கண்காணிப்பாளர் அர்பன் யாதுவான்ஷி சம்பவ இடத்திற்கு விரைந்தார். உடனே நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார். 

மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகத்தின் பணியாளர்கள் ஆகியோரும் சம்ப இடத்தில் உள்ளனர். 

இந்த சுரங்கவழிப்பதை மூலம் உத்தரகாஷி, யாமுன்டோரி இடையே 26 கிலோமீட்டர் பயணதூரம் குறைக்கப்படவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.