ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களில் ஹரியாணா மாநிலம் யமுனாநகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 போ் உயிரிழந்தனா். அங்குள்ள அம்பாலா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், யமுனாநகரில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 6 போ் உயிரிழந்ததாக மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஹிமாத்ரி கெளஷிக் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
கைதானவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சிலா் குறித்து தெரியவந்துள்ளதாகவும், அவா்களும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும் ஹிமாத்ரி கெளஷிக் தெரிவித்தாா்.