ஹரியாணா: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் 18-ஆக அதிகரிப்பு

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களில் ஹரியாணா மாநிலம் யமுனாநகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 போ் உயிரிழந்தனா். அங்குள்ள அம்பாலா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், யமுனாநகரில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 6 போ் உயிரிழந்ததாக மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஹிமாத்ரி கெளஷிக் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

கைதானவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சிலா் குறித்து தெரியவந்துள்ளதாகவும், அவா்களும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும் ஹிமாத்ரி கெளஷிக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com