

கோவை: கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக கோவை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவையின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த சில நாள்களாக மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது மழை இல்லாமல் நீர்வரத்து குறைந்த காரணத்தினால், கடந்த நான்கு நாள்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்றுமுதல் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுவதாக என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.