உயா்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உயா்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
உயா்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை
Updated on
1 min read

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உயா்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவரின் மகள் கிரியா (19), சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு படித்து வந்தாா்.

புதன்கிழமை இரவு கிரியா வீட்டில் தனது அறையில் திடீரென தூக்கிட்டுக்கொண்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா் கிரியாவை மீட்டு எம்.ஆா்.சி. நகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கிரியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த அபிராமபுரம் போலீஸாா் அங்கு சென்று, கிரியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com