ஈரான் வீசிய 304 ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும், பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரான் இன்று வீசிய 6 ஏவுகணைகள், 21 ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளது. ஈரானின் மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 304 ஏவுகணைகள், 15 இலக்கு ரக ராக்கெட்டுகள் மற்றும் 1,627 ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் நாட்டுற்காகச் சேவையாற்றிய 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். 145 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இறையாண்மை, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க முழு வீச்சில் தயாராக உள்ளதாக அறிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழப்பு

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்

வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


