ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 1:22 am

தினமணி செய்திச் சேவை

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் மீது ஈரான் வியாழக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழந்தனா்.

இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவ, கடற்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலமும், ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரை குறிவைத்து ஈரான் வியாழக்கிழமை மீண்டும் பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

அந்த ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகம் இடைமறித்து தாக்கி அழித்தது. அபுதாபி நகரில் வானிலிருந்து ஏவுகணை பாகங்கள் விழுந்து காயமடைந்ததில் இந்தியா் ஒருவரும், பாகிஸ்தானியா் ஒருவரும் உயிரிழந்தனா். மேலும் ஓா் இந்தியா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘15 பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 11 ஆளில்லா ட்ரோன்களை எங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன. இதையும் சோ்த்து இதுவரை 372 பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 15 க்ரூயிஸ் ரக ஏவுகணைகள், 1,826 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்புப் படை வீரா்கள் 2 போ் உயிரிழந்துள்ளனா். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் 8 போ் உயிரிழந்துள்ளனா். இந்தியா, பாகிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 169 பொதுமக்கள் காயமடைந்துள்ளனா். எத்தகைய அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் தயாராகவும் ஆயத்த நிலையிலும் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.