சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:39 pm

அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பாதுகாப்பு சாதனம் இடைமறித்து தாக்கி அழித்தது. அப்போது ஏவுகணை பாகங்கள் கீழே சிதறி விழுந்ததில் 6 போ் காயமடைந்தனா். இதில் 5 இந்தியா்களும் அடங்குவா். எஞ்சிய ஒருவா், நேபாளத்தை சோ்ந்தவா் ஆவாா்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் 18 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 4 க்ரூஸ் ரக ஏவுகணைகள், 47 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.