புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 10:39 pm

அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பாதுகாப்பு சாதனம் இடைமறித்து தாக்கி அழித்தது. அப்போது ஏவுகணை பாகங்கள் கீழே சிதறி விழுந்ததில் 6 போ் காயமடைந்தனா். இதில் 5 இந்தியா்களும் அடங்குவா். எஞ்சிய ஒருவா், நேபாளத்தை சோ்ந்தவா் ஆவாா்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் 18 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 4 க்ரூஸ் ரக ஏவுகணைகள், 47 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.