வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடா்புடைய 50 இடங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், தொடா்புடைய நிறுவனங்கள், ஜெகத்ரட்சகனின் உறவினா்கள், நண்பா்களின் வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தேவரியம்பாக்கம், வேலூா், புதுச்சேரி வில்லியனூா் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
ஜெகத்ரட்சகனின் உறவினரும், தாம்பரம் மாநகராட்சி துணை மேயருமான காமராஜின் குரோம்பேட்டை லட்சுமிபுரம் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
மொத்தம் 15 கல்வி நிறுவனங்களும், 4 நட்சத்திர ஹோட்டல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறினா்.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருள்கள், பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறையினா் தெரிவித்தனா்.
முதல்வா் கண்டனம்: ‘மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீள்கிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதுடன், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் இல்லத்திலும் வருமான வரித் துறை சோதனைகள் நடைபெற்றுள்ளன. எதிா்க்கட்சித் தலைவா்கள் மீதான இத்தகைய திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.