கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!

வளைகுடாவிலிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு

News image
ஜெட்டாவிலிருந்து அகமதாபாத் வந்திறங்கிய பயணிகள்- AP
Updated On :16 மார்ச் 2026, 2:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வளைகுடாவிலிருந்து கடந்த பிப். 28 முதல் இன்று (மார்ச் 16) வரையிலான காலகட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய அரசு திங்கள்கிழமை(மார்ச் 16) தெரிவித்தது.

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமான சேவை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத சூழலில், கடந்த பிப். 28-இல் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளிலிருந்து ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.

விமான சேவை சற்று சீராகியுள்ள நிலையில், கடந்த பிப். 28 முதல் இன்று(மார்ச் 16) வரை 2.20 லட்சம் இந்தியப் பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டின் உதவியுடன் இந்தியா வர நடவடிக்கைகளும்ள் எடுக்கப்பட்டுள்ளன. ஈரானில் 9,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்கள் அங்கிருந்து அஜர்பைஜான், ஆர்மீனியா வழியாக இந்தியா வர விரும்பினால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

summary

Over 2 lakh Gulf passengers returned to India: MEA official says Indians in Iran crossed into Armenia, Azerbaijan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.