கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக பேரவைக் கூட்டத்தை பார்வையிடும் ஆஸி. நாடாளுமன்றக் குழு!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

News image
ஆஸி. நாடாளுமன்றக் குழு
Updated On :9 அக்டோபர் 2023, 6:10 am

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

நிகழாண்டின் 2-ஆம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் காவிரி நீரை திறந்துவிட கா்நாடகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானம் கொண்டு வரவுள்ளார். முதலில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தலைவர் மில்டன் டிக் தலைமையில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் உள்பட 11 பேர் தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகின்றனர்.

அவர்களை வரவேற்ற பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களின் சார்பில் வரவேற்பதாக பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.