
தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை இந்த முறையும் வேறு இடத்துக்கு மாற்றாததால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு அதிமுகவினர் கடிதம் எழுதி இருந்தனர்.
இருப்பினும், தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகேவுள்ள துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இன்று கூடியுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்தப் பிரச்னை எதிரொலித்துள்ளது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பேரவை தலைவரிடம் மீண்டும் ஓபிஎஸ் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த கூட்டமும் இருக்கை மாற்றாமல் தொடங்கியதால், கூட்டத்துக்கு வராமல் பேரவையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையிலேயே எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.