கம்பம்: நீர் பிடிப்புப்பகுதியில் பலத்த மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் வினாடிக்கு 1,713 கன அடியாக வந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி 32.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 45.0 மி.மீ மழையும் பெய்தது.
இதையும் படிக்க | சென்னையில் 20 இடங்களில் வருமானவரித் துறை சோதனை
அணையின் நீர்மட்டம் 123.45 உயரமானது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 3,311.10 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 2,893.20 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,300 கன அடியாகவும் இருந்தது.
நீர் பிடிப்புப் பகுதியில் பலத்த மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை அணைக்கு 1,180 கன அடியாக வந்த தண்ணீர், புதன்கிழமை வினாடிக்கு 2,893.20 கன அடியாக வந்தது. அதாவது ஒரே நாளில் வினாடிக்கு 1,713 கன அடி தண்ணீர் வரத்துள்ளது.