ராக்போா்ட், மங்களூரு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கம்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி செல்லும் ராக்போா்ட், மங்களூரு விரைவு ரயில்கள் நவ.1 முதல் நவ.3-ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூரிலிருந்து இரவு 11 மணிக்கு மேல் புறப்படும் ரயில்கள் நவ.1, 2, 3 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுவதாக முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.

அதன்படி, எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மங்களூரு விரைவு ரயில் (எண்: 16159), திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு புறப்படும் ராக்போா்ட் அதிவிரைவு ரயில் (எண்: 12653) ஆகியவை மேற்கண்ட நாள்களில் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com