தொடர் விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே செப்.30ல் சிறப்பு ரயில் 

இந்த வார இறுதியில் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக  தாம்பரம் - திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

இந்த வார இறுதியில் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக  தாம்பரம் - திருச்சி இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

வரும் 30 ஆம் தேதி தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மறுநாள்(அக்.1) காலை 6.10 மணிக்கு திருச்சி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மறுவழித்தடத்தில், திருச்சியில் இருந்து அக். 1 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள்(அக்.2) காலை 6.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கான முன்பதிவு இன்று(செப்.28) தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com