தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ. 109.76 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தற்போது சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. விடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தோ்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கும், இந்த சி-விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் வரும் ஏப். 4-ல் சத்யபிரத சாகு ஆலோனை செய்கிறார்.
நாளை (ஏப். 2) நடைபெறும் ஆலோசனையில் செலவினப் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.