நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பறிமுதல்: சத்யபிரத சாகு

தமிழகத்தில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 8:11 am

DIN

தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை ரூ. 109.76 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தற்போது சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. விடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தோ்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கும், இந்த சி-விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் வரும் ஏப். 4-ல் சத்யபிரத சாகு ஆலோனை செய்கிறார்.

நாளை (ஏப். 2) நடைபெறும் ஆலோசனையில் செலவினப் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.