சென்னையில் ஏப். 9-ல் பிரதமரின் வாகனப் பேரணி!

சென்னையில் ஏப். 9 ஆம் தேதி பிரதமரின் வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஏப். 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்காக பிரசாரம் செய்ய பிரதமர் மோடி சென்னை வருகை தரவுள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரத்தின் கோண்டியாவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமர், மாலை 4.10 மணிக்கு சென்னைக்கு வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஆளுநா் மாளிகை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமர் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
நாளை முதல் மழை பெய்யப்போகிறதா! மகிழ்ச்சியில் மக்கள்!

இந்த நிலையில், ஏப்ரல் 9-ஆம் தேதி சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

பாண்டி பஜார் சாலையில் செய்யப்ட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com