முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

எந்த முகத்தோடு தமிழகம் வருகிறார் மோடி? மு.க. ஸ்டாலின்

வாக்கு கேக்க மட்டும் மோடி வந்து செல்ல தமிழகம் என்ன சரணாலயமா? தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களா?

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 8:18 pm IST

தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்யாத பிரதமர் நரேந்திர மோடி எந்த முகத்துடன் இங்கு வருகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதிவேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 9) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தை மட்டுமல்ல. எந்த திட்டங்களையோ, உதவிகளையோ செய்யாத் பிரதமர் எந்த முகத்தோடு தமிழகம் வந்துள்ளார்? வாக்கு கேக்க மட்டும் மோடி வந்து செல்ல தமிழகம் என்ன சரணாலயமா? தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களா?

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகத்தையும் மோடி வஞ்சிக்கிறார்.

பெண் சக்தி பற்றி பேசும் மோடி, பெண்கள் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு சென்றாரா?

மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்டபோது பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?

விடியல் பயணம், நான் முதல்வர், புதுமைப்பெண் என்று திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பேசினார்.

ரூ.65 ஆயிரம் கோடியில் கல்விக் கடனை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாங்கள் மதத்திற்கு எதிரியல்ல, மக்களை பிளவுபடுத்துவோருக்குத்தான் எதிரி.

திமுக ஆட்சியில் 1,556 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.

இந்திய நதிகளை இணைத்தாரா மோடி? குழாய் மூலம் கேஸ் இணைப்பு தந்தாரா?

அமலாக்கத் துறை, குற்றப் புலனாய்வுத் துறை வைத்து அரசியல் செய்கிறார் மோடி. அவருக்கு எதிராக பேசினாலே சோதனை வருகிறது எனக் குறிப்பிட்டார்.

பாஜகவின் இரண்டாவது அணியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். பாஜக கூட்டணியிலிருந்து விலகியதாக நாடகமடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

தமிழுக்கும் தமிழகத்துக்கும் துரோகம் செய்யும் மோடியுடன் இபிஎஸ் கூட்டு வைத்துள்ளார்.

பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு துரோகம் புரிந்தவர் எடப்பாடி பழனிசாமி.

அத்தகையவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையும் மதிக்கும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர் பிரதமராக ஆட்சியில் அமர வேண்டும் என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.