'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஜிஎஸ்டி வரி அல்ல, வழிப்பறி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜிஎஸ்டி குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி!

'தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்' என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், 'ஜி.எஸ்.டி. பொருளாதாரச் சுதந்திரம்' என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்-இல் உள்ள ஜிஎஸ்டி-யைப் பார்த்து எனப் புலம்புகின்றனர்!

 முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
தமிழகத்தை தாக்கவுள்ள வெப்ப அலை: வெதர்மேன் எச்சரிக்கை

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது.

33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com