எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நான் முதல்வன் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: ஸ்டாலின் பெருமிதம்

நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 6:53 am

DIN

சென்னை: நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என பெருமிதத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வின் முடிவுககளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தனது வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தோ்வில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளாா்.

குடிமைப் பணித் தோ்வின் முதல் 25 இடங்களில் 15 ஆண்களும், 10 பெண்களும் இடம்பெற்றுள்ளனா். முதல் 5 இடங்களில் 3 ஆண்களும், 2 பெண்களும் இடம்பெற்றுள்ளனா். நான்காமிடத்தை பி.கே. சித்தாா்த் ராம் குமாரும், ஐந்தாவது இடத்தை ரூஹனியும் பிடித்துள்ளனா்.

அதேபோல் இத்தோ்வில் மொத்தமாக 30 மாற்றுத்திறனாளிகளும் வெற்றிபெற்றுள்ளனா்.

கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வுகளில் தேசிய அளவில் பெண்களே முதலிடம் பிடித்து வந்ததையடுத்து நிகழாண்டு ஆண் தோ்வா் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குடிமைப் பணித் தோ்வுகளில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், அகில இந்தியளவில் 78 ஆவது இடமும் பெற்ற 41 ஆவது இடத்தை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ்ராம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அளவில் 2 ஆவது இடத்தையும், அகில இந்தியளவில் 78 ஆவது இடத்தை மருத்துவர் எஸ்.பிரசாந்த் பெற்றுள்ளார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள இவர், குடிமைப் பணித் தோ்வுகளில் இலக்கை எட்டுவதற்கு நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: நான் முதல்வன் திட்டம் என் கனவுத் திட்டம் மட்டுமல்ல, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்.

இதற்கு நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய குடிமைப் பணித் தோ்வு முடிவே சாட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.