மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் விமர்சனம்

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி- DOTCOM
Updated On :17 ஏப்ரல் 2024, 5:19 am

Ravivarma.s

ஊழலின் சாம்பியன் பிரதமர் நரேந்திர மோடி என்று நாட்டு மக்கள் அறிவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள்(ஏப்.19) நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்கள சந்தித்துப் பேசினார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

“இந்த தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையேயானது. ஒருபுறம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இணைந்து இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்க நினைக்கிறது. மறுபுறம் இந்தியா கூட்டணியும் காங்கிரஸும் பாதுகாக்க முயற்சிக்கிறது. நாட்டில் வேலையின்மையும், பணவீக்கமும் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளன. ஆனால், இதனைப் பற்றி பேசாமல் மக்களை பாஜகவும், பிரதமரும் திசைதிருப்புகிறார்கள்.

சில நாள்களுக்கு முன்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி நேர்காணல் அளித்தார். அது திட்டமிடப்பட்ட நிகழ்வு, ஆனால் தோல்வியில் முடிந்தது. தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அரசியலை தூய்மைப்படுத்தவும், வெளிப்படைத் தன்மைக்காகவும் கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார். அது உண்மை என்றால் உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்ய வேண்டும்.

வெளிப்படைத்தன்மைக்காக கொண்டு வரப்பட்டது என்றால் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயரை வெளியிடாதது ஏன்?. பணம் கொடுக்கப்பட்ட தேதியை மறைத்தது ஏன்?. உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல், மிரட்டிப் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழிலதிபர்களும் இதை அறிவார்கள், பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த நினைத்தாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில், பிரதமர் ஊழலின் சாம்பியன் என்று நாட்டில் உள்ளவர்கள் அறிவார்கள்.

அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சி முடிவெடுக்கும். அதை பின்பற்றுவேன்.

பாஜக 180 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்தேன், ஆனால் தற்போதைய நிலவரப்படி 150 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். அனைத்து மாநிலங்களிலும் எங்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.

அதானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே எங்களின் முதல் பணியாக இருக்கும். அதற்காக எங்களின் தேர்தல் வாக்குறுதியில் 23 அம்சங்களை வழங்கியுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.