மக்களவை தோ்தலையொட்டி, பயணிகள் வசதிக்காக இன்று (ஏப். 18) தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:
தாம்பரத்தில் இருந்து இன்று (ஏப். 18) இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06007) நாளை (ஏப். 19) பகல் 11.15 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும்.
மறு வழித்தடத்தில் நெல்லையிலிருந்து நாளை (ஏப். 19) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06008) மறுநாள்(ஏப். 20) காலை 8.45 மணிக்கு தாம்பரத்துக்கு வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, சங்கரன்கோவில், தென்காசி, சேரன்மாதேவி வழியாக இயக்கப்படுகிறது.