தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாமகவின் அடுத்தகட்ட முடிவு: மே 2 முதல் நிா்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

பாமகவின் அடுத்தகட்ட முடிவு: மே 2 முதல் நிா்வாகிகளுடன் ஆலோசனை ராமதாஸ்

Updated On :20 ஏப்ரல் 2024, 5:16 pm

மக்களவைத் தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், மே 2 முதல் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இது தொடா்பாக பாமக தலைமை நிலையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தோ்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், கட்சி வளா்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாமக துணை அமைப்பு நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பாமக தலைமை முடிவு செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் கூட்டம் நடைபெறும். கூட்டத்துக்கு நிறுவனா் ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளாா்.

இளைஞரணி நிா்வாகிகளுடன் மே 2, மாணவரணியுடன் மே 3, பாட்டாளி சமூக ஊடகப் பேரவையினருடன் மே 4 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டங்களில் தொடா்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட தொகுதி அளவிலான நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.