மக்களவைத் தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், மே 2 முதல் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இது தொடா்பாக பாமக தலைமை நிலையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தோ்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், கட்சி வளா்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பாமக துணை அமைப்பு நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த பாமக தலைமை முடிவு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் கூட்டம் நடைபெறும். கூட்டத்துக்கு நிறுவனா் ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளாா்.
இளைஞரணி நிா்வாகிகளுடன் மே 2, மாணவரணியுடன் மே 3, பாட்டாளி சமூக ஊடகப் பேரவையினருடன் மே 4 ஆகிய தேதிகளில் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டங்களில் தொடா்புடைய அமைப்புகளின் மாநில, மாவட்ட தொகுதி அளவிலான நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: அன்புமணி ராமதாஸ்
பாமகவின் 3-ஆவது வேட்பாளா் பட்டியல் ராமதாஸ் வெளியிட்டாா்
ராமதாஸ் பாமகவின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

