மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இல்லத்தரசிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இந்த திட்டத்திற்காக தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்தாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டோக்கன் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com