குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்!
தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை இன்று (ஏப். 24) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதியும், 2,030 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவும் நிறைவடைந்துவிட்டது.
இந்த நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
8 லட்சம் தேர்வர்களுடன் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?

நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசு

நீட் மறுதேர்வு எப்போது? - என்டிஏ இயக்குநர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



