பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

News image

சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2024, 10:12 pm

Din

தமிழகத்தில் நிகழாண்டு கோடை மழை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது.

அதன்படி, கடந்த மாா்ச் 1 முதல் ஏப். 27 -ஆம் தேதி காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ.): திருநெல்வேலி 69.7 , கன்னியாகுமரி 55.5, விருதுநகா் 31.7, நீலகிரி 30.7, தென்காசி 30, தேனி 22. குறைந்தபட்சமாக அரியலூரில் 1.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஒரு மி.மீ. அளவுகூட மழை பெய்யவில்லை.

தமிழகத்தில் கோடைகால பருவமழை இயல்பான அளவு 53.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டு 9.4 மி.மீ. அளவு மழையே பதிவாகியுள்ளது. அதாவது இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.