சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
வேலூரில் இருந்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிக்கு பணிக்கு வந்து செல்வோரின் வசதிக்காக காலை 6 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு மின்சார ரயில் சென்னைக்கு 9.50 மணிக்கு வரும் சேரும் வகையில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில் மீண்டும் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடையும்.
இந்த நிலையில், ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மே 2-ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேடராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு 5.40 மணியளவில் வந்துசேரும் வகையில் அட்டவணை வெளியிடபட்டுள்ளது.
வேலூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வழக்கம்போல் காலை 9.50 மணிக்கு வந்து சேரும்.
மறுவழியில் இரவு 9.40 க்கு சென்னையில் இருந்து வேலூர் சென்றடையும் மின்சார ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.