கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அருந்ததியர் பிரிவுக்கான உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்திட அரசுக்கு கோரிக்கை

அருந்ததியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்திடுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

Published On :

அருந்ததியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்திடுமாறு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த தீர்ப்பால் இங்கேயுள்ள ஒடுக்கப்பட்ட, அடித்தட்டில் இருக்கிற அருந்ததியர் பிரிவு மக்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கப்பட்டிருக்கிறது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அருந்ததியர் பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக மாற்றித்தர வேண்டிய அவசியமிருக்கிறது. அதை இந்த அரசு செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.