அருந்ததியர் பிரிவினருக்கான உள்இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயர்த்திடுமாறு ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த தீர்ப்பால் இங்கேயுள்ள ஒடுக்கப்பட்ட, அடித்தட்டில் இருக்கிற அருந்ததியர் பிரிவு மக்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கப்பட்டிருக்கிறது.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப அருந்ததியர் பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக மாற்றித்தர வேண்டிய அவசியமிருக்கிறது. அதை இந்த அரசு செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்! - நெல்லை முபாரக்

இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7% உயா்த்தக் கோரிக்கை
சீனாவில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவருக்கு உதவ தமிழக அரசுக்கு கோரிக்கை
இலவச மின் இணைப்பு: அரசுக்கு பாபநாசம் விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



