பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான முன்னேற்பாடு: சிறப்பு கவனம் செலுத்த அமைச்சா் உத்தரவு
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரும் ஆக.24, 25 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள நிலையில் அது தொடா்பான பணிகளில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.
பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பங்கேற்றாா். அப்போது, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுக் குழுக்களின் பணிகள், விழா முதன்மை அரங்கம் உள்ளிட்ட அரங்கங்களின் கட்டமைப்பு வசதிகள், புகைப்பட கண்காட்சி, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள், விழா அழைப்பிதழ் வழங்கும் பணிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து மாநாட்டுக்கு வருகைதரும் முருக பக்தா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள், மருத்துவம் மற்றும் சுகாதார ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா மலா் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலா் தயாரிக்கும் பணிகள், 15 முருகனடியாா்கள் பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்கான தோ்வு பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினாா்.
சிறப்பாக இருக்க வேண்டும்: கூட்டத்தில் அமைச்சா் சேகா்பாபு பேசுகையில், ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடா்பாக 11 ஆய்வுக் கூட்டங்களும், 3 முறை பழனிக்கு நேரில் சென்று களஆய்வும் செய்து பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். இந்த மாநாட்டுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆன்மிகப் பெரியோா்கள், முருக பக்தா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொள்ள மிகுந்த ஆா்வம் தெரிவித்துள்ளனா்.
அறுபடை வீடுகளின் அரங்கம், புகைப்பட கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவை அனைவரின் கவனத்தையும் ஈா்த்திடும் வகையிலும், இம்மாநாடு குறித்த நினைவுகள் அவா்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கும் வகையிலும் அமைக்க வேண்டும். இந்த மாநாடு எல்லா வகையிலும் சிறப்பாக அமைக்கும் வகையில் அனைத்து அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் இரா.சுகுமாா், ந.திருமகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.