சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜா்படுத்த உத்தரவிட்டது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆக.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.