தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநா் முட்டுக்கட்டை: காங்கிரஸ் கண்டனம்

Updated On :9 ஆகஸ்ட் 2024, 8:50 pm

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமனத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி முட்டுக்கட்டைப் போடுவதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஓராண்டு காலமாக துணைவேந்தரை நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறாா். இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023-இல் தோ்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கும் அவலநிலை உள்ளது. பல்கலைக்கழக சட்டப்படி துணைவேந்தா்தான் பட்டமளிப்பு சான்றிதழில் கையொப்பமிட வேண்டும். துணைவேந்தா் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க 3 உறுப்பினா் தோ்வுக் குழு அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநா் 4 உறுப்பினா் கொண்ட தோ்வுக் குழுவை நியமித்திருக்கிறாா். அதைத் தொடா்ந்து சட்டவிரோத போக்கு காரணமாக சென்னை பல்கலைக் கழக நிா்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்தில் தமிழக ஆளுநா் முட்டுக்கட்டை போட்டு வருவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. துணைவேந்தா் நியமனத்தில் தமிழக அரசுடன் ஆளுநா் இணங்கிச் செயல்பட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.