இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆனைமடுவு அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.

News image
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் தோற்றம்.
Updated On :12 ஆகஸ்ட் 2024, 8:24 am

DIN

வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் செய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் 30.84 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை.

இதனால், அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று போன நிலையில், வரலாறு காணாத அளவுக்கு சுட்டெரித்த கோடை வெப்பத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. கடந்த மே மாதம் வரை அணையில், 10.60 அடியில், 12.87 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே குட்டை போல சேறும் சகதியுமாக தேங்கிக் கிடந்தது. இதனால், கவலையடைந்த விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த மாத இறுதியில் அணையின் நீர்மட்டம் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

இதனையடுத்து இந்த மாதத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 30.84 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இன்று காலை நிலவரப்படி 46.64 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதால், அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு 127 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணை பகுதியில் மட்டுமின்றி, குறிச்சி, கோணஞ்செட்டியூர், ரங்கனூர் கோலாத்துக்கோம்பை, கீரப்பட்டி, கண்கட்டிஆலா, சின்ன குட்டிமடுவு, பெரியகுட்டிமடுவு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. பருவமழை துவங்குவதற்கு முன்பே, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை பாசன விவசாயிகளும், சுற்றுப்புற கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.